சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்


சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2021 4:54 PM GMT (Updated: 23 Oct 2021 4:54 PM GMT)

சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டம்

திருப்புவனம்
சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் செய்து வருகின்றனர். திருப்புவனத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. கிளை செயலாளர் கணேசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், குறைந்தபட்ச கூலி சட்டப்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சிவகங்கை அரசு போக்குவரத்து கழக பணிமனைக்குள் தொடர் முழக்கப் போராட்டம் சி.ஐ.டி.யூ.தொழி்ற்சங்கம் சார்பாக நடந்தது. போராட்டத்தில் பணிமனை கிளை தலைவர் ஜான் பீட்டர், கிளை செயலாளர் சமயத்துறை, கிளை பொருளாளர் வாசுதேவன், ஓய்வு பெற்றோர் சங்கத்தின் தலைவர் ஆத்மநாதன், செயலாளர் முத்துக்கருப்பன், பொருளாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story