நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Oct 2021 5:32 PM GMT (Updated: 23 Oct 2021 5:32 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,822 ஆக குறைந்தது. இந்த நிலையில் நேற்று புதிதாக 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 877 ஆக அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே நேற்று 64 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 781 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 600 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 495 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிள்ளாநத்தம் பகுதியை சேர்ந்த 44 வயது பெண் சிகிச்சை பலன்இன்றி இறந்தார். இதனால் இம்மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 496 ஆக அதிகரித்துள்ளது.
=======

Next Story