போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2021 6:53 PM GMT (Updated: 23 Oct 2021 6:53 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர், 
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதற்கு சி.ஐ.டி.யு. திருச்சி மண்டல துணை பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன், மத்திய சங்க பொதுச்செயலாளர் கருணாநிதி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
25 சதவீதம் போனஸ்
ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டப்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். பேட்டா, இன்சென்டிவ், பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். அகவிலைப்படி உயர்வு நிலுவை வழங்க வேண்டும். 
ஓய்வு பெற்றோர் பண பலன், 70 மாத டி.ஏ.நிலுவை, டி.ஏ. உயர்வு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story