‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Oct 2021 7:08 PM GMT (Updated: 24 Oct 2021 7:08 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வாகன ஓட்டிகள் அவதி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட முத்து நகர், வேலாயுதம் நகர், சேவகதெரு, சின்னவளையம் முதலியார் தெரு உள்ளிட்ட 13 இடங்களில் சாலைகள் அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் போடப்பட்டன. ஆனால் சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சாலை அமைக்கும் பணியினை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும்.
ஆறுமுகம், ஜெயங்கொண்டம்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் நகரில் வேகத்தடை அமைக்கப்படாததால் வாகனங்கள் அதிவேகத்தில் சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பால்பண்ணையில் இருந்து பி.எல்.ஏ. ரவுண்டானம் வரை எந்த ஒரு தடுப்பும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வேகத்தடை அமைக்க வேண்டும்.
நதியா, புதுக்கோட்டை.
கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் விராலிமலை ரோடு பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தெருவில் விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும், நீண்டநாள் தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கழிவுநீரை சாலையில் விடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆபத்தான மின்கம்பங்கள்
திருச்சி அம்பிகாபுரம் செல்லும் வழியில்  தங்கேஸ்வரி நகர், மேலத்தெரு, கீழத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சு உதிர்ந்து எலும்பு கூடாக இருப்பதை படத்தில் காணலாம்.
நரேஷ், திருச்சி.
பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம் ஜே.கே. நகர் மற்றும் அதன் அருகருகே அமைந்துள்ள நகர்ப்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாதாள சாக்கடை பணியின் காரணமாக தோண்டப்பட்ட சாலைகள் தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கால்நடையாக சாலைகளில் பயணிப்பதும் கால்நடைகளுக்கு கூட சாத்திய படாத நிலைதான் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து இப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும். 
ஜே.கே. நகர் குடியிருப்பு மக்கள், திருச்சி.
கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு
திருச்சி மாவட்டம் உறையூரில் இருந்து குழுமணி செல்லும் சாலையில் லிங்கநகர் பகுதியில் சாலையின் நடுவில் குதிரை, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு கால்நடைகள் இறக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
சக்திவேல். மருதாண்டகுறிச்சி.
பாசன வாய்க்காலில் செடி, கொடிகள் ஆக்கிரமிப்பு
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் தாலுகா, கிளியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகே பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் செடி, கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரகேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாசன வாய்க்காலில் உள்ள செடி கொடிகளை அகற்றி தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திலீபன், திருச்சி.
பாதாள சாக்கடை தூர்வாரப்படுமா?
திருச்சி சங்கிலியாண்டபுரம் பாத்திமா தெருவில்  பாதாள சாக்கடைகள் தூர்வாரப்படாமல் உள்ளது.  மேலும், பாதாள சாக்கடைகள் நிரம்பி வீடுகள் முன்பு கழிவுநீர் செல்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அர்ஜுன், திருச்சி.

Next Story