சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 20 மூட்டை வெல்லம் பறிமுதல்


சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 20 மூட்டை வெல்லம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Oct 2021 6:43 PM GMT (Updated: 26 Oct 2021 6:43 PM GMT)

கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 20 மூட்டை வெல்லம் பறிமுதல்


கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலையில் உள்ள தாழ்மதூர் கிராமத்தில் மர்மநபர்கள் சாராயம் காய்ச்சுவதற்காக வெல்லம் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் தாழ்மதூர் கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கொட்டகையில் சாராயம் காய்ச்சுவதற்காக தலா 30 கிலோ எடை கொண்ட 20 மூட்டை வெல்லத்தை பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல்செய்தனர். மேலும் இது தொடர்பாக ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவுசெய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story