தந்தை கத்தியால் குத்திக்கொலை


தந்தை கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 26 Oct 2021 8:04 PM GMT (Updated: 26 Oct 2021 8:04 PM GMT)

தந்தையை கத்தியால் குத்திக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

பாடாலூர்:

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;-
தந்தை- மகன்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, எலந்தலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 50). இரும்பு பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு தையல்நாயகி மற்றும் ராணி என 2 மனைவிகள் உள்ளனர். இதில் தையல்நாயகிக்கு வேலவன்(21), வெற்றிவேல்(19) என்ற 2 மகன்களும், ராணிக்கு கதிர்(14) என்ற மகனும் உள்ளனர்.
தையல்நாயகி சிறுவாச்சூர் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். ராணி மற்றும் 3 மகன்களுடன் எலந்தலப்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் முருகன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலவனுக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து, அதே வீட்டில் வசித்து வந்தனர்.
கொலை
இந்நிலையில் நேற்று வேலவன், அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முருகனுக்கும், வேலவனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வேலவன் வீட்டின் வெளியே வைத்து முருகனை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் கழுத்து, கை மற்றும் கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் அங்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் முருகனுக்கும், வேலவனின் மனைவிக்கும் தொடர்பு இருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வேலவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story