கயத்தாறு அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனமுைடந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


கயத்தாறு அருகே  மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால்  மனமுைடந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 27 Oct 2021 12:58 PM GMT (Updated: 27 Oct 2021 12:58 PM GMT)

கயத்தாறு அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனமுைடந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

கயத்தாறு:
கயத்தாறு அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனமுைடந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம்
கயத்தாறு அருகே திருமணங்களக்குறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த கங்கஞங்கிணறு கிராமத்தில் வசித்து வருபவர் தங்கப்பாண்டியன்.  இவரது மகன் பாண்டியராஜன் (வயது 33). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குளசேகரன்கோட்டையை சேர்ந்த வள்ளிவேல் என்பவரின் மகள் வசந்தா(30) என்ற பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். 
வெளிநாட்டில் வேலை
திருமணம் முடிந்த 3 மாதங்களில் பாண்டியராஜன் வெளிநாட்டில் வேலைக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து வசந்தா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் 2 ஆண்டுகளில் மீண்டும் ஊருக்கு திரும்பிய பாண்டியராஜன், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.  இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. பலமுறை பாண்டியராஜன் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அவர் அழைத்தும் வரவில்லையாம். 
விஷம் குடித்தார்
இதனால் பாண்டியராஜன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தோட்டத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த பாண்டியராஜன் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணி திலீப் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story