பெயிண்டர் கொலை வழக்கில் வாலிபர் கைது


பெயிண்டர் கொலை வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2021 5:44 PM GMT (Updated: 27 Oct 2021 5:44 PM GMT)

சிவகங்கை பெயிண்டர் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை, 

சிவகங்கை பெயிண்டர் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெயிண்டர் கொலை
"
சிவகங்கை போலீஸ் நிலையம் அருகில் வசித்து வந்தவர் முத்துக்குமார் (வயது 40). பெயிண்டர்.கடந்த 25-ந்தேதி இரவு 9 மணி அளவில் முத்துக்குமார் (40), அவரது தம்பி திவான் (36), சித்தப்பா மகனான முருகன் (36) ஆகிய 3 பேரும் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஊருணிஅருகில் இருந்தபோது அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திவானை தன் கையில் வைத்திருந்த வாளால் வெட்டினார். இதைப்பார்த்த முத்துக்குமாரும் முருகனும் அவரை தடுக்க முயன்றார்கள். அப்போது அந்த வாலிபர் அவர்களையும் வாளால் வெட்டினார். 
இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். சிவகங்கை நகர் போலீஸ் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த சம்பவத்தை பார்த்த அந்தப் பகுதியில் இருந்த மக்கள் பயந்து ஓடினார்கள். ரத்தவெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

வாலிபர் கைது

 இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஸ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் முன் விரோதம் காரணமாக சிவகங்கை காமராஜர் காலனியை சேர்ந்த இத்திராஜ் (19) என்பவர் 3 பேரையும் வாளால் வெட்டி விட்டு தயாராக இருந்த ஒருவரது மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றது ெதரிய வந்தது.
 இதை தொடர்ந்து போலீசார் இத்திராஜை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்பு உடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story