நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,065 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,065 ஆக அதிகரிப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,065 ஆக அதிகரிப்பு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 52,065 ஆக அதிகரித்து உள்ளது.
43 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 52 ஆயிரத்து 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 65 ஆக அதிகரித்து உள்ளது.
520 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று 59 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 50 ஆயிரத்து 49 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 496 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 520 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story