கோவில்களில் பைரவாஷ்டமி வழிபாடு


கோவில்களில் பைரவாஷ்டமி வழிபாடு
x
தினத்தந்தி 28 Oct 2021 7:38 PM GMT (Updated: 28 Oct 2021 7:38 PM GMT)

கோவில்களில் பைரவாஷ்டமி வழிபாடு நடந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது. இதில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் வடுக பைரவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பன்னிரு திருமுறைகள், பைரவ அஸ்ட்டோத்ரம், சிவபுராணம் ஓதப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
இதேபோல் அரியலூர் செட்டி ஏரிக்கரையில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவருக்கு செவ்வரளி மாலை, வடை மாலை சாற்றி வழிபாடு செய்தனர். ேமலும் தெரு நாய்களுக்கு பிஸ்கட் வழங்கினர்.

Next Story