என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை


என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 29 Oct 2021 7:53 PM GMT (Updated: 29 Oct 2021 7:53 PM GMT)

வள்ளியூரில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வள்ளியூர்:
வள்ளியூர் யாதவர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அனிஷ் (வயது 20). இவரை வள்ளியூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டில் அய்யப்பன் சேர்த்துள்ளார். ஆனால் அனிஷ் கோவையில் படிக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Next Story