டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ விபத்து


டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 30 Oct 2021 6:31 PM GMT (Updated: 30 Oct 2021 6:31 PM GMT)

டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

கரூர்,
கரூர் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 62). இவர் அப்பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அந்த நிறுவனத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து கடை உரிமையாளர் பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story