இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சைக்கிள் ஊர்வலம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சைக்கிள் ஊர்வலம்
x
தினத்தந்தி 30 Oct 2021 7:58 PM GMT (Updated: 30 Oct 2021 7:58 PM GMT)

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஊர்வலம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் ஏலாக்குறிச்சியில் இருந்து திருமானூர் வரை கட்சியினர் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். இதில் ஒன்றிய துணை செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story