ராசிபுரத்தில் அதிகபட்சமாக 48 மி.மீட்டர் மழைபதிவு


ராசிபுரத்தில் அதிகபட்சமாக 48 மி.மீட்டர் மழைபதிவு
x
தினத்தந்தி 1 Nov 2021 5:22 PM GMT (Updated: 1 Nov 2021 5:22 PM GMT)

ராசிபுரத்தில் அதிகபட்சமாக 48 மி.மீட்டர் மழைபதிவு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ராசிபுரத்தில் அதிகபட்சமாக 48 மி.மீட்டர் மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-
ராசிபுரம்-48, திருச்செங்கோடு-26, குமாரபாளையம்-26, மங்களபுரம்-11, எருமப்பட்டி-10, புதுச்சத்திரம்-9, பரமத்திவேலூர்-8, கலெக்டர் அலுவலகம்-5, சேந்தமங்கலம்-5, நாமக்கல்-3, மோகனூர்-3, கொல்லிமலை-3. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 157 மி.மீட்டர் ஆகும்.
நாமக்கல் நகரை பொறுத்தவரையில் நேற்றும் காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை நிலவியது.

Next Story