மின்னல் தாக்கி தொழிலாளி பலி


மின்னல் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 1 Nov 2021 8:37 PM GMT (Updated: 1 Nov 2021 8:37 PM GMT)

மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம் கீழ விளாங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன்(வயது 65). கூலி தொழிலாளி. அப்பகுதியில் நேற்று மதியம் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அர்ஜூனன் வீட்டின் அருகே மழை நீர் சூழ்ந்துள்ளது. அப்போது வீட்டின் உள்ளே மழை நீர் வராமல் இருக்க கால்களால் தள்ளி தண்ணீரை வெளியேறியுள்ளார்.
அப்போது அப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அர்ஜூனன் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீசார் அர்ஜூனனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story