சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி


சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 5 Nov 2021 6:37 PM GMT (Updated: 5 Nov 2021 6:37 PM GMT)

சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

கறம்பக்குடி, 
கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45). இவர் கறம்பக்குடியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கார்த்திகா ரெகுநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சுப்பிரமணியன் நேற்று முன்தினம் கறம்பக்குடியில் இருந்து ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ராங்கியன்விடுதிக்கு சென்றார். அங்கு பயணிகளை இறக்கிவிட்டு அவர் மட்டும் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு கறம்பக்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கறம்பக்குடி அருகே பிள்ளகுறிச்சி சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியனை அப்பகுதி மக்கள் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுப்பிரமணியன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story