சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோவில் கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 5 Nov 2021 8:56 PM GMT (Updated: 5 Nov 2021 8:56 PM GMT)

சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் கோட்டைவாசல் மேல வீதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன்(வயது 26). இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விக்னேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Next Story