ஊருணியில் மூழ்கி பெண் சாவு


ஊருணியில் மூழ்கி பெண் சாவு
x
தினத்தந்தி 7 Nov 2021 5:55 PM GMT (Updated: 7 Nov 2021 5:55 PM GMT)

பாண்டுகுடி அருகே ஊருணியில் மூழ்கி பெண் பலியானார்.

தொண்டி,

திருவாடானை தாலுகா, பாண்டுகுடி ஊராட்சி, தினையத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 45). இவருடைய மனைவி சித்ரா(41). இந்த நிலையில் சித்ரா நேற்று மாலை பிள்ளையார்கோவில் ஊருணிக்கு குளிக்க சென்றார். ஊருணியில் குளித்த போது நீரில் மூழ்கி அவர் பலியானார். இது குறித்து சித்ராவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் தொண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story