தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி


தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
x
தினத்தந்தி 11 Nov 2021 12:56 AM GMT (Updated: 11 Nov 2021 12:56 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். 14 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். 14 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனிடையே நேற்று தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது 166 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 277 பேர் பலி
தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 277 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 28 ஆயிரத்து 578 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story