ரேஷன் அரிசி பதுக்கிய 2 விற்பனையாளர்கள் உள்பட 3 பேருக்கு ஜெயில்


ரேஷன் அரிசி பதுக்கிய 2 விற்பனையாளர்கள் உள்பட 3 பேருக்கு ஜெயில்
x
தினத்தந்தி 11 Nov 2021 6:53 PM GMT (Updated: 11 Nov 2021 6:53 PM GMT)

ரேஷன் அரிசி பதுக்கிய 2 விற்பனையாளர்கள் உள்பட 3 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்
ரேஷன் அரிசி பதுக்கிய 2 விற்பனையாளர்கள் உள்பட 3 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
ரேஷன் அரிசி பறிமுதல்
விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 25.4.2014 அன்று அருப்புக்கோட்டை-திருச்சுழி ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது  வாழவந்தான் கோவில் அருகே இருசக்கரவாகனத்தில் வந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சந்திரன் என்பவரிடம் இருந்து 100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள தொட்டியங்குளம் ெரயில்வே பாலத்தின் கீழ் பதுக்கிய 9 மூடைகளில் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். 
அவரிடம் விசாரணை செய்ததில் அருப்புக்கோட்டை ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஜோசப் மற்றும் குணசீலன் ஆகியோரிடமிருந்து ரேஷன் அரிசியை வாங்கியதாக தெரிவித்தார். 
ஜெயில்
இதைதொடர்ந்து சந்திரன், ஜோசப் மற்றும் குணசீலன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட் மருதுபாண்டி குற்றம் சாட்டப்பட்ட சந்திரனுக்கு 6 மாத ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், ரேஷன் கடை விற்பனையாளர் ஜோசப் மற்றும் குணசீலன் ஆகிய இருவருக்கும் தலா 3 வருட ஜெயில் தண்டனையும், ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story