விளம்பர பதாகை மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு


விளம்பர பதாகை மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 12 Nov 2021 8:13 PM GMT (Updated: 12 Nov 2021 8:13 PM GMT)

விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்

விராலிமலை
தென்காசி மாவட்டம், ராவண சமுத்திரத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மகன் தமிம்அன்சாரி (வயது 26). இவர் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ரசூல் முகமது மகன் மீராசா (24) ஆகிய இருவரும் சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் சொந்த ஊர் செல்வதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தமீம் அன்சாரி ஓட்டினார். விராலிமலை அருகே உள்ள விராலூர் பிரிவு சாலை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகை மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தமிம் அன்சாரி, மீராசா இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், தமிம்அன்சாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் மீராசா திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story