ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2021 7:40 PM GMT (Updated: 13 Nov 2021 7:40 PM GMT)

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சுரண்டை- ஆலங்குளம் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் வந்த லோடு ஆட்டோவை வழிமறித்து சோதனை நடத்தியதில் 45 மூட்டைகளில் 2,250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக டிரைவர் ஆனந்தராஜ் (வயது 29), பனையடிபட்டியைச் சேர்ந்த மாரி செல்வன் (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story