மினி லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது


மினி லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2021 8:16 PM GMT (Updated: 14 Nov 2021 8:16 PM GMT)

மினிலாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சங்கரன்கோவில்:

கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் வேலாயுதபுரம் சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலங்குளம் அண்ணாநகரை சேர்ந்த துரைபாண்டி மகன் சேகர் (வயது 35) என்பவர் வந்த மினி லாரியை சோதனை செய்தனர். இதில் சேகர் உசிலம்பட்டியில் இருந்து 1¾ கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. 

இது தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து சேகரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சாவையும், மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்

Next Story