நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு; 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து


நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு; 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 16 Nov 2021 6:59 PM GMT (Updated: 16 Nov 2021 6:59 PM GMT)

நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்டனர்.

கிருஷ்ணராயபுரம், 
நிலப்பிரச்சினை
கிருஷ்ணராயபுரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 29). மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நீலமேகம். இவருடைய மகன் கோபி (23). உறவினர்களான இவர்கள் 2 பேருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 
இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 
கத்திக்குத்து
இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களையும் அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story