நாளை மின்தடை


நாளை மின்தடை
x
தினத்தந்தி 18 Nov 2021 7:59 PM GMT (Updated: 18 Nov 2021 7:59 PM GMT)

பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகர் அருகே நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர், 
விருதுநகர் அருகே சூலக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை காவலர் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே. செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாத்தி நாயக்கம்பட்டி, தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

Next Story