தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 20 Nov 2021 5:07 PM GMT (Updated: 20 Nov 2021 5:07 PM GMT)

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

பொங்கலூர்,
பொங்கலூர் அருகே உள்ள நாதே கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கருப்பன் என்பவரது மகன் பழனியப்பன் (வயது 80). கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை 3 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத போது கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் பழனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பழனியப்பன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story