காவிரி ஆற்றில் மூழ்கி முதியவர் பலி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 22 Nov 2021 6:28 PM GMT (Updated: 22 Nov 2021 6:28 PM GMT)

காவிரி ஆற்றில் மூழ்கி முதியவர் பாிதாபமாக இறந்தார்

கரூர்
கரூர் அருகே உள்ள பெரிய வரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவர் நேற்று முன்தினம் கரூர் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story