கொரோனாவுக்கு பெண் பலி


கொரோனாவுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 22 Nov 2021 9:16 PM GMT (Updated: 22 Nov 2021 9:16 PM GMT)

கொரோனாவுக்கு பெண் உயிரிழந்தார்.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தலா 4 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 51 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 12 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 28 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story