நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி  விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2021 5:02 AM GMT (Updated: 23 Nov 2021 5:02 AM GMT)

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி காரிமங்கலத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரிமங்கலம்:
காரிமங்கலத்தில் மொரப்பூர் சாலையில் தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் முனிராஜ், மாவட்ட பொது செயலாளர் முனியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல், மாநில செய்தி விளம்பர செயலாளர் பெருமாள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் தும்பலஅள்ளி அணைக்கு நீர் கொண்டு வந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க பஞ்சப்பள்ளி அனையில் இருந்து தும்பலஅள்ளி அணை, கம்பைநல்லூர் ஆறு வரை நீர்வரத்து கால்வாயில் உள்ள முட்புதர்கள், சீமைகருவேல மரங்கள் ஆகியவற்றை தூர்வாரி வார வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Next Story