நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,128 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,128 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2021 5:18 AM GMT (Updated: 23 Nov 2021 5:18 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53,128 ஆக அதிகரிப்பு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53,128 ஆக அதிகரித்து உள்ளது.
41 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 53,083 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 87 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 128 ஆக அதிகரித்து உள்ளது.
407 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று 46 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.  இதுவரை 52,216 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 505 பேர் இறந்து விட்ட நிலையில் மீதமுள்ள 407 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story