மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது


மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2021 7:31 PM GMT (Updated: 23 Nov 2021 7:31 PM GMT)

மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசாருக்கு அப்பகுதியில் மது விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தத்தனூர்குடிகாடு கிராமத்தை சேர்ந்த வளர்மதி(வயது 50), சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை(50) ஆகியோர் அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story