காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்


காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2021 8:26 PM GMT (Updated: 23 Nov 2021 8:26 PM GMT)

சுரண்டை அருகே சீராக குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள கழுநீர்குளம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சீராக குடிநீர் வழங்க கோரி அந்த பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தெருமுனையில் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய துணை செயலாளர் பாபு தலைமையில், முருகன், ஜீவா, தங்கம், பூமாரி, முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரகேரளம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். 

Next Story