தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்


தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 24 Nov 2021 11:28 AM GMT (Updated: 24 Nov 2021 11:28 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story