நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 24 Nov 2021 6:00 PM GMT (Updated: 24 Nov 2021 6:00 PM GMT)

தேவகோட்டை, சிவகங்கை, புதுவயல் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேவகோட்டை, 
தேவகோட்டை, சிவகங்கை, புதுவயல் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி
சாக்கவயல் -புதுவயல் துணை மின் நிலையத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி புதுவயல், கண்டனூர், மித்ராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்க்கலைக்காடு, வீரசேகர புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித துள்ளார்.
 இதேபோல தேவகோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால்  தேவகோட்டை டவுன், உதயாச்சி, உடப்பன் பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமண வயல், நாகாடி, அனுமந்தகுடி, ஊரணிகோட்டை பனங்குளம், மாவிடுதிக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினி யோகம் இருக்காது என தேவகோட்டை உதவி செயற் பொறியாளர் சாத்தப்பன் அறிவித்துள்ளார்.
சிவகங்கை
 இதேபோல சிவகங்கை துணை மின் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாத்திரசன்கோட்டை மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சாத்திரசன்கோட்டை, முத்துப்பட்டி, பொன்னாகுளம், மனாகுடி, பனையூர், பையூர், ஆலங்குளம், செங்குளம், உடை நாதபுரம், வல்லனி, கூத் தாண்டம்  மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

Next Story