கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்


கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்
x
தினத்தந்தி 24 Nov 2021 7:36 PM GMT (Updated: 24 Nov 2021 7:36 PM GMT)

கூடங்குளம் 2-வது அணுஉலையில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.

வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்பு மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 18-ந் தேதி 2-வது அணு உலையில் டர்பனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டர்பனில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். நேற்று அதிகாலையில் பழுது சீரமைக்கப்பட்டு 2-வது அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 230 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் முழு மின் உற்பத்தி திறனை எட்டும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.

Next Story