கால்வாயில் மிதந்த ஆண் பிணம்


கால்வாயில் மிதந்த ஆண் பிணம்
x
தினத்தந்தி 24 Nov 2021 8:11 PM GMT (Updated: 24 Nov 2021 8:11 PM GMT)

சுரண்டை அருகே கால்வாயில் ஆண் பிணம் மிதந்தது.

சுரண்டை:
சுரண்டை அருகே வீரகேரளம்புதூரை அடுத்த ராஜகோபாலபேரி வழியாக வீராணம் பெரியகுளத்துக்கு கால்வாய் செல்கிறது. அடவிநயினார் அணையில் இருந்து செல்லும் இந்த கால்வாயில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது.
நேற்று காலையில் இந்த கால்வாய் வழியாக 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் மிதந்து வந்தது. இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து, வீரகேரளம்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்் உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்தவர் யார்? அவர் கால்வாயில் குளித்தபோது மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story