பஸ்சில் இருந்து தவறி விழுந்த அமரர் ஊர்தி டிரைவர் பலி


பஸ்சில் இருந்து தவறி விழுந்த அமரர் ஊர்தி டிரைவர் பலி
x
தினத்தந்தி 24 Nov 2021 8:21 PM GMT (Updated: 24 Nov 2021 8:21 PM GMT)

அருப்புக்கோட்டை அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த அமரர் ஊர்தி டிரைவர் பலியானார்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே ஆமணக்குநத்தம் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் சின்னசாமி. இவரது மகன் திலீப்குமார் (வயது 35). மதுரையில் அமரர் ஊர்தி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று திலீப்குமார் அருப்புக்கோட்டை செல்வதற்காக ஆமணக்குநத்தம் கிராமத்தில் இருந்து தனியார் பஸ்சில் ஏற முயன்றதாகவும் அப்போது திடீரென பஸ்சில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த திலீப்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பந்தல்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story