இருக்கூர் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி


இருக்கூர் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
x
தினத்தந்தி 25 Nov 2021 4:57 AM GMT (Updated: 25 Nov 2021 4:57 AM GMT)

இருக்கூர் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள வீராணம்பாளையத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 46). விவசாயி. இவர் கடந்த 17-ந் தேதி மொபட்டில் கபிலர்மலைக்கு சென்று விட்டு இருக்கூர்- பரமத்தி சாலையில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருக்கூர் அருகே உள்ள ஒரு தனியார் ஸ்டீல் மில் அருகே சென்றபோது மொபட் நிலை தடுமாறியதில் சாலையின் இடதுபுறத்தில் மோகனசுந்தரம் தவறி கீழே விழுந்தார். 
இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
====

Next Story