கூட்டுறவுத்துறை மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை


கூட்டுறவுத்துறை மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை
x
தினத்தந்தி 25 Nov 2021 7:44 PM GMT (Updated: 25 Nov 2021 7:44 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
தக்காளி விற்பனை
தஞ்சை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை காவேரி சிறப்பு அங்காடியில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யும் பணியினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு துறையின் மூலம் பண்ணை நல பசுமை மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நியாய விலை கடைகளில் தக்காளி மலிவு விலையில் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 முதல் ரூ.140 அளவில் விற்பனை செய்யப்படும் நிலையில் கூட்டுறவுத்துறை மூலம் மலிவு விலையில் தஞ்சை மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மலிவு விலை
தஞ்சை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைமையகத்தில் அமைந்துள்ள பண்ணை பசுமை அங்காடி, கொடைக்கார தெரு கரந்தை, ஜெயேந்திரா பள்ளி வடக்கு தெரு, வடக்கு வீதி, வடக்கு வீதி ஏ.ஒய்.ஏ.ரோடு, அய்யங்கடைத்தெரு தமதமமேடை, ஏ.ஒய்.ஏ. நாடார் ரோடு கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம் வண்டிக்கார தெரு, புதிய ஹவுசிங் யூனிட், காமராஜர் ரோடு சீனிவாசபுரம். கும்பகோணம் பாலக்கரை, பாட்ராச்சாரியார் தெரு, சிங்காரம் செட்டி தெரு, செல்வம் தியேட்டர் எதிர்புறம், நால்ரோடு அருகில் ஆகிய இடங்களிலும் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பட்டுக்கோட்டையில் உள்ள தஞ்சை சாலை, பாளையம் மற்றும் கரிக்காடு காந்திநகர் ஆகிய இடங்களில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மேற்கண்ட இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் தக்காளிகளை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, துணைப்பதிவாளர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story