ஜாமீனில் வெளியே வந்தவர் விஷம் குடித்து தற்கொலை


ஜாமீனில் வெளியே வந்தவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 25 Nov 2021 8:12 PM GMT (Updated: 25 Nov 2021 8:12 PM GMT)

ஜாமீனில் வெளியே வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் காலனி தெருவை சேர்ந்தவர் வெள்ளையன்(வயது 55). இவர் வீட்டில் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார், அங்கு வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், அவர் கடந்த ஆண்டு ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் அரியலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு தனக்கு சாதகமாக வராது என்று கருதி, வெள்ளையன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், என்று தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story