சாலையில் இறந்து கிடந்த வாலிபர்


சாலையில் இறந்து கிடந்த வாலிபர்
x
தினத்தந்தி 26 Nov 2021 8:03 PM GMT (Updated: 26 Nov 2021 8:03 PM GMT)

வாலிபர் சாலையில் இறந்து கிடந்தார்.

மங்களமேடு:

மங்களமேட்டை அடுத்த வி.களத்தூர் பிரிவு சாலை அருகே உள்ள தனியார் பள்ளி எதிரில் நேற்று காலை சாலையின் மைய தடுப்புச்சுவர் பகுதியில் வலது கையில் நீண்ட சங்கலி பிணைக்கப்பட்ட நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதையறிந்த மங்களமேடு போலீசர் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து இறந்து கிடந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story