நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மானாமதுரை,
மானாமதுரை ெரயில்வே காலனி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மனைவி தனபாக்கியம் (வயது61). இவர் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தபோது 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் அவர் அணிந்து இருந்த 10 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு ஓடி விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை தனிப்படை போலீ சார் நகை பறிப்பில் ஈடுபட்ட மதுரை நாராயண புரத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் விஜய் (22), நாகூர் மகன் சுல்த்தான் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story