பெண்ணிடம் செல்போன் பறிப்பு


பெண்ணிடம் செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 27 Nov 2021 7:51 PM GMT (Updated: 27 Nov 2021 7:51 PM GMT)

பாளையங்கோட்டையில் பெண்ணிடம் செல்போன் பறித்த மர்மநபரை தேடி வருகின்றனர்.

நெல்லை:
பாளையங்கோட்டை அன்புநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 30). இவர் பெருமாள்புரம் ரெயில்வே பீடர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென விஜயலட்சுமி கையில் வைத்திருந்த கைப்பையை பறித்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். அந்த பையில் செல்போன், ரூ.1200 ஆகியவை இருந்தது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீசில் விஜயலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story