இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Nov 2021 8:40 PM GMT (Updated: 27 Nov 2021 8:40 PM GMT)

பாவூர்சத்திரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் செங்குந்தர் பெரிய தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன் கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது 25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. மாரியப்பன், செல்வி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வி உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் தென்காசி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story