பஸ் மோதி தொழிலாளி சாவு


பஸ் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 28 Nov 2021 4:57 PM GMT (Updated: 28 Nov 2021 4:57 PM GMT)

பஸ் மோதி தொழிலாளி சாவு

வளவனூர்

வளவனூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 40). அந்த பகுதியில் உள்ள டீ கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று இரவு வளவனூரில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் வந்த போது புதுச்சேரியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story