நண்பருடன் மீன்பிடிக்க ெசன்ற ேபாது ஏரியில் மூழ்கி வாலிபர் பலி


நண்பருடன் மீன்பிடிக்க ெசன்ற ேபாது ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 29 Nov 2021 8:31 AM GMT (Updated: 29 Nov 2021 8:31 AM GMT)

நண்பருடன் மீன்பிடிக்க ெசன்ற ேபாது ஏரியில் மூழ்கி வாலிபர் பலி


சேலம் அருகே பரிதாபம்
சேலம், நவ.29-
நண்பருடன் மீன்பிடிக்க ெசன்ற போது ஏரியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
நண்பர்கள்
சேலம் வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்தவர் விஷ்வா (வயது 27). டிரைவர். இவருடைய நண்பர் அதிகாரிப்பட்டியை சேர்ந்த சரவணன் (21). இவர்கள் இருவரும் நேற்று காலையில் மீன் பிடிப்பதற்காக அதிகாரிப்பட்டி அருகே உள்ள கீழாத்துப்பட்டி ஏரிக்கு சென்றுள்ளனர்.
இருவரும் மீன்பிடிக்க தண்ணீருக்குள் இறங்கினர். அப்போது விஷ்வா மட்டும் சேறும், சகதியுமான பகுதியில் இறங்கியதாக தெரிகிறது. திடீரென அவரது கால் சேற்றுக்குள் சிக்கி அவரால் தண்ணீரை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பரிதாப சாவு
தண்ணீரில் தத்தளித்த நண்பனை பார்த்து சரவணன் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். பின்னர் தண்ணீரில் மூழ்கிய விஷ்வாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். அதற்குள் விஷ்வா பரிதாபமாக இறந்துள்ளார்.
தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விஷ்வா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நண்பருடன் மீன்பிடிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story