மனைவியை உயிரோடு எரித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை


மனைவியை உயிரோடு எரித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 29 Nov 2021 5:43 PM GMT (Updated: 29 Nov 2021 5:43 PM GMT)

நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை உயிரோடு எரித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

ராமநாதபுரம், 
நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை உயிரோடு எரித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
எரித்துக்கொலை
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள தோளுர் தெற்குபட்டியை சேர்ந்தவர், தர்மர் (வயது46). இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (45). இவர்களுக்கு 5 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 
இந்தநிலையில் தர்மர், மனைவி பஞ்சவர்ணம் நடத்தையின் மீது சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். 
இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த தர்மர், மனைவி என்றும் பாராமல் பஞ்சவர்ணம் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்து, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பஞ்சவர்ணம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுதொடர்பாக அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 
வழக்கினை நீதிபதி சுபத்ரா விசாரித்து, மனைவியை உயிரோடு எரித்து கொலை செய்த தர்மருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கீதா ஆஜரானார்.

Next Story