தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை


தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 29 Nov 2021 7:47 PM GMT (Updated: 29 Nov 2021 7:47 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். 
தொழிலாளி 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 60). கூலி ெதாழிலாளி. இவருடைய மனைவி ஊருக்கு சென்று விட்டதால் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. 
உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது கருப்பையா கத்திக்குத்து காயத்துடன் பிணமாக கிடந்துள்ளார். 
கொலை 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கருப்பையாவை கொலை செய்தவர்கள் யார்? முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது என்ன காரணம் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story