பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி


பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி
x
தினத்தந்தி 29 Nov 2021 8:13 PM GMT (Updated: 29 Nov 2021 8:13 PM GMT)

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் செல்லதுரை(வயது 33). இவர் தனது தாய் மருதாம்பாளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை செல்லதுரை வேலைக்கு சென்றுவிட்டார். மருதாம்பாள் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் மதியம் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததையும், வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் நகை, பணம் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக செல்லதுரை அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story