நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக கூறி பள்ளி ஊழியரிடம் ரூ.95 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை


நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக கூறி பள்ளி ஊழியரிடம் ரூ.95 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Nov 2021 5:32 PM GMT (Updated: 30 Nov 2021 5:32 PM GMT)

நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக கூறி பள்ளி ஊழியரிடம் ரூ.95 ஆயிரம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை:
மோசடி 
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்தவர் அழகுராஜ் (வயது34). இவர் அரிமளம் உயர்நிலைப்பள்ளியில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு மர்மநபர் பேசி, தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக கூறியிருக்கிறார். மேலும் அதற்காக ரூ.95 ஆயிரத்து 349-ஐ மர்மநபர் ஆன்-லைனில் பெற்றிருக்கிறார். ஆனால் கடன் ஏற்பாடு செய்து கொடுக்காமல் மர்மநபர் மோசடி செய்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் அழகுராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story